ஐ.நா. சபையில் ட்ரம்ப் – அநுர சந்திப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி “Lotte New York Palace” ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமோகமாக வரவேற்றதுடன், சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.




