2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு – உயர் நீதிமன்றின் நடவடிக்கை.

உள்ளூர்September 25, 2025 · 11 months முன்0
எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு – உயர் நீதிமன்றின் நடவடிக்கை.

எக்ஸ்பிரஸ் பேர்ள்ஸ் கப்பல் தீ விபத்து தொடர்பான அடிப்படை உரிமைகள் வழக்குகள் மையமாக, இழப்பீட்டை செலுத்தத் தவறிய வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்பது தொடர்பாக, உயர் நீதிமன்றம் இன்று (25) சட்டமா அதிபருக்கு விசாரணை செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் இன்று அழைக்கப்பட்டபோது, நீதிமன்றம், கடந்த கால உத்தரவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய விருப்பம் தெரிவித்தது.

அதற்கமைய, சட்டமா அதிபர் 2026 ஜனவரி 26ஆம் திகதி அன்றைய நீதிமன்ற அமர்வில் சமர்ப்பணங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.