பத்மே, பெக்கோ சமனிடம் நீண்ட நேர விசாரணை.

தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோர், மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்யப்படுள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் காவலில் உள்ள சம்பத் மனம்பேரி, அவருக்குச் சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் தயாரிக்கும் இரசாயனங்கள் தொடர்பாக, இன்று (21) மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
இவை தொடர்பான விசாரணைகள் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு அனுமதியுடன் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




