தீவிரமாகும் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இன்று (21) நள்ளிரவு முதல் மேலும் தீவிரமாகிறது.
தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளதாவது, கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
16 முக்கிய கோரிக்கைகள் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம், ஊழியர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.