2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கும் அரசு – சஜித் ஆதங்கம்.

உள்ளூர்September 16, 2025 · 11 months முன்2
எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கும் அரசு – சஜித் ஆதங்கம்.

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்குவதற்கு பதிலாக, எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவ பிரதேச விவசாய பிரச்சினைகளை ஆய்வு செய்ய சென்ற போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

– இது குறித்து சஜித் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன,

மக்கள் பிரச்சினைகள் பேசப்படும் நேரத்தில் ஒலிவாங்கியை துண்டிப்பது வழக்கமாகியுள்ளது. ஒலிவாங்கிகளை துண்டிப்பதையோ அல்லது விவாதத்தை சீர்குலைப்பதையோ விடுத்து எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நடைமுறை ரீதியான பதில்களை பெற்றுக்கொடுக்கும் பணியையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சியினர் அரசியல் நாடகம் நடத்தவில்லை; மக்கள் சிக்கியுள்ள உண்மைப் பிரச்சினைகளை முன்வைத்து, தீர்வுகளை கோருகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் பொய்யான கதைகளை பரப்பும் யுகத்திற்கு மாறி விட்டது. ஐக்கிய மக்கள் சக்தி உண்மையான தீர்வுகளை வழங்க விரும்புகிறது. என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.