நேருக்கு நேர் மோதிய 4 மோட்டார் சைக்கிள்கள் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, மருதனார்மடம் பகுதியில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து மோட்டார் சைக்கிளுடன் சைக்கிள் மோதியதில் நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சைக்கிள் ஒன்று, வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிள் தடுமாறி எதிர்திசையில் வந்த 2 மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளமை சி.சி.டிவி காட்சிகளில் வெளியாகியுள்ளது.