2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மித்தெனிய துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்கள் கைது.

உள்ளூர்September 9, 2025 · 11 months முன்2
மித்தெனிய துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்கள் கைது.

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்த பகுதியில் கடந்த ஜுன் மாதம் 24ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டைக் கொலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டி பகுதியில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 09 மி.மீ அளவிலான கைத் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 53 தோட்டாக்கள், T56 ரக 19 தோட்டாக்கள், T56 ரக வெற்று தோட்டாக்கள், ஒரு ஜோடி கைவிலங்கு, 300 கிராம் ஹெரோயின் என்பனவற்றையும் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.