2026 September 3, Thursday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 33°
LIVE
நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்!5ஆம் தர புலமைப்பரிசிலில் தமிழ் மொழிமூலம் சாதனை!தோனியின் சாதனையை கடந்த ரிஷப் பண்ட்!அஸ்வெசும முதியோர் உதவித்தொகை இன்று முதல் கிடைக்கும்!வானிலையில் மாற்றம் – பல பகுதிகளுக்கு மழை முன்னறிவிப்பு!2026 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியீடு!ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள் இன்று வெளியீடு!நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

வானிலையில் மாற்றம் – பல பகுதிகளுக்கு மழை முன்னறிவிப்பு!

உள்ளூர்September 3, 2026 · 2 hours முன்12
வானிலையில் மாற்றம் – பல பகுதிகளுக்கு மழை முன்னறிவிப்பு!

இன்று முதல் அடுத்த சில நாட்களில், நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதேவேளை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளுக்கு நேர் மேலே சூரியன் காணப்படும். 

இன்றைய தினம் (03) நண்பகல் 12:09 மணிக்கு மாதம்பே, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.