2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மட்டக்களப்பில் சமாதான செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சிநெறி

உள்ளூர்September 8, 2025 · 11 months முன்0
மட்டக்களப்பில் சமாதான செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சிநெறி

“அமைதியைக் கட்டியெழுப்புதலும் சமூக ஒருங்கிணைவும்” எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட சமாதானச் செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு தன்னாமுனை மியானி பயிற்சி நிலையத்தில் மூன்று நாள் வதிவிடப் பயிற்சிநெறி செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில் தேசிய மட்டத்தில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய வலையமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளின் முனைப்பாக குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் 25 சமூக சமாதான செயற்பாட்டாளர்கள் உட்பட் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் திட்ட வளவாளர் எஸ்.திலீபன், திட்ட சிரேஷ்ட இணைப்பாளர். ஐ.சுதாவாசன், உட்பட தந்தை செல்வா அறக்கட்டளையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பரந்துபட்ட அளவில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளின் ஓரங்கமாக இந்த பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.