2026 August 29, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளைப் புறக்கணிக்க தமிழரசுக் கட்சி தீர்மானம்.பொலன்னறுவை நீர்த்தேக்கங்களில் வேகமாக குறையும் நீர்மட்டம்!இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வு – உலக வானிலையில் பெரும் மாற்றம்!இலங்கை கடற்பரப்புக்கு அருகே ஈரானிய கப்பல்கள் நங்கூரம்!பாண் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் வருமா?இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி இல்லை!நிரம்பி வழியும் புதிய ஏரி – மற்றொரு பெருவெள்ளம் வருமா?

பொலன்னறுவை நீர்த்தேக்கங்களில் வேகமாக குறையும் நீர்மட்டம்!

உள்ளூர்August 29, 2026 · 19 minutes முன்2
பொலன்னறுவை நீர்த்தேக்கங்களில் வேகமாக குறையும் நீர்மட்டம்!

பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் 36% வரை மேலும் குறைவடைந்துள்ளது. 

அந்நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 110,000 ஏக்கர் அடி ஆகும் என்பதுடன், அது தற்போது 40,000 ஏக்கர் அடி வரை குறைவடைந்துள்ளது. 

எப்படியிருப்பினும், மின்னேரிய நீர்த்தேக்கத்திலிருந்து இம்முறை சிறுபோகச் செய்கைக்கான வயல்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளது. 

பொலன்னறுவையின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டமும் தற்போது குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளது. 

அதன் மொத்தக் கொள்ளளவு 116,000 ஏக்கர் அடி ஆகும் போதிலும், தற்போது அது 63,000 ஏக்கர் அடி வரை குறைவடைந்துள்ளதுடன், இது அதன் மொத்தக் கொள்ளளவில் 56% ஆகும். 

தற்போது சிறுபோகச் செய்கைக்காக அந்நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

அதேபோல் 21,600 ஏக்கர் அடி கொள்ளளவைக் கொண்ட கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாகக் குறைவடைந்து வருவதுடன், தற்போது அது 8,500 ஏக்கர் அடியை விடக் குறைவடைந்துள்ளது. 

எப்படியிருப்பினும், அந்நீர்த்தேக்கத்திலிருந்தும் சிறுபோகச் செய்கைக்காக நீர் திறந்துவிடும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.