2026 August 23, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பெருமையளிக்கிறது – பிரதமர்!தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!இந்திய கடற்படை – கடலோர காவல்படை கூட்டுத் தேடுதல்!சுற்றுலா வருமானத்தில் 234 மில்லியன் டொலருக்கும் மேல் சரிவு!ஜனாதிபதி தலைமையில் மாவட்டந்தோறும் மக்கள் கூட்டம்!இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை!சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை!கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக்கிரியை இன்று

தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!

உள்ளூர்August 23, 2026 · 4 hours முன்3
தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!

2026 கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் ஏசல பெரஹரா திருவிழாவின் இறுதி கும்பல் பெரஹரா தற்போது வீதி உலாவை ஆரம்பித்துள்ளது.

மாலை 06.28 மணி சுப முகூர்த்தத்தில் ஆரம்பமான பெரஹரா, ஸ்ரீ தலதா வீதியில் பயணித்து ராஜா வீதி வழியாக மேலே வந்து ஐந்தாவதும் இறுதியுமான கும்பல் பெரஹராவாக நிறைவடையும்.

இன்று (22) புனித பேழை சுமந்து செல்லும் நிகழ்வு, ஸ்ரீ தலதா மாளிகையின் யானைப்பந்தியின் இளவரசனாகக் கருதப்படும் ‘சிங்க ராஜா’ யானையால் மேற்கொள்ளப்படுகிறது.

‘மியன் ராஜா’ மற்றும் ‘புலதிசி ராஜா’ ஆகிய இரண்டு யானைகளும் இருபுறமும் உடன் செல்கின்றன.