2026 August 21, Friday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பொலிஸ் தலைமையகத்திலிருந்து விசேட அறிவிப்பு!நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!சிறுபோக நெல் கொள்வனவுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு!அதிகாலை நடந்த கோர விபத்தில் ஐவர் பலி!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!சீருடை விவகாரத்தை இன முரண்பாடாக மாற்ற வேண்டாம் – MP சாணக்கியன்சஷி வீரவங்சவை முன்பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!கடற்கொந்தளிப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் படகு விபத்து – மீனவரை தேடும் பணி தீவிரம்!

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

உள்ளூர்August 21, 2026 · 3 hours முன்10
மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.