2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக SJB மனு!22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு!பிள்ளையனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிப்பு!முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு பிணை!மேலதிகமாக 6 பணியாளர்களை நியமித்த விவகாரத்தில் கெஹெலிய கைது!மட்டக்களப்பு, அம்பாறை, மொணராகலையில் குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை!வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு!

உள்ளூர்August 18, 2026 · 27 minutes முன்3
22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு!

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (18) முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவை எனின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.