2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஒக்டோபர் வரை குறிப்பிடத்தக்க மழைக்கு வாய்ப்பில்லையா?

உள்ளூர்August 11, 2026 · 5 days முன்2
ஒக்டோபர் வரை குறிப்பிடத்தக்க மழைக்கு வாய்ப்பில்லையா?

தற்போது நிலவும் மழையற்ற வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 நீர் இன்மையால் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 பொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக நெல் விவசாயமும் அழியத் தொடங்கியுள்ளது.

 அத்துடன், நீர் இன்மையால் தமது மகசூலுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 எவ்வாறாயினும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வானிலை அவதானிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.