2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஹொரணையில் ரூ.7 கோடி மாணிக்கக்கல் அகழ்வு மோசடி முறியடிப்பு!

உள்ளூர்July 28, 2026 · 3 weeks முன்0
ஹொரணையில் ரூ.7 கோடி மாணிக்கக்கல் அகழ்வு மோசடி முறியடிப்பு!

ஹொரணை, கொபவகவத்தை களுகங்கை மோதரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான மாணிக்கக்கல் அகழ்வு மோசடி ஒன்றை வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். 

இதன்போது, 3 மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த முற்றுகையின் போது, 11 படகுகள், 5 மோட்டார்கள் உட்பட மாணிக்கக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட 7 கோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.