2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காணி பிரச்சினைகளைத் தீர்க்கும் ஐக்கிய நாடுகள் சபை.

உள்ளூர்September 7, 2025 · 11 months முன்0
காணி பிரச்சினைகளைத் தீர்க்கும் ஐக்கிய நாடுகள் சபை.

ஐக்கிய நாடுகள் சபை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கவுள்ளது.

நாட்டில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏராளமான உரிமைகோரல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே ஃபிராஞ்ச் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனங்களுடன் தாம் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.