2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: விசாரணையை ஆரம்பிக்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு!

உள்ளூர்July 7, 2026 · 1 month முன்2
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: விசாரணையை ஆரம்பிக்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட மற்றும் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விசாரணைக்காக நேற்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்ட போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.