2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டைகள்!

உள்ளூர்July 1, 2026 · 2 months முன்2
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டைகள்!

அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகளை வழங்குவதற்காக, புதிய சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை நடத்திய விசேட கூட்டத்தின் போதே இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அடையாள அட்டை நடைமுறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரச அலுவலகங்களில் எவ்வித தாமதமுமின்றி தங்களுக்கான தேவைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படவுள்ளது.