2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

டெங்கு அபாய கட்டத்தை நோக்கி இலங்கை!

உள்ளூர்June 18, 2026 · 2 months முன்0
டெங்கு அபாய கட்டத்தை நோக்கி இலங்கை!

டெங்கு நோய் பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அபாய கட்டத்தை எட்டும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

‘BIG FOCUS’நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஏப்ரல் மாதம் முதல் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிவேக அதிகரிப்பு பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கமைய, ஏப்ரல் மாதத்தில் 5,600 டெங்கு நோயாளர்களும், மே மாதத்தில் 8,500 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் அனில் ஜாசிங்க, 

பொதுவாக டெங்கு நோய் சில வருடங்களுக்கு ஒருமுறை அதி-தொற்று நிலையை அடையும் ஒரு தன்மையே வரலாற்றில் காணப்படுகிறது. 

இதில் ஆகக்கூடிய சிவப்புப் புள்ளி 2017 இல் பதிவாகியுள்ளது. இவ்வருட வரைபடத்தில் நீல நிறப் புள்ளி மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

இதனை நாம் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த நேரத்தில் நாம் விழிப்புடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது. 

வருடம் முழுவதும் இவ்வாறான செயல்பாடுகள் முக்கியமாகும். காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப இது மாறுபடலாம் எனத் தெரிவித்தார்.