2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அச்சுவேலி தரவை பகுதியில் தீ விபத்து!

உள்ளூர்June 13, 2026 · 2 months முன்2
அச்சுவேலி தரவை பகுதியில் தீ விபத்து!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அச்சுவேலி பகுதியில் காணப்படும் தரவை பகுதியில் காணப்பட்ட குப்பைக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டியதில் , கடும் காற்று காரணமாக தீ , தரவை பகுதியில் உள்ள புற்தரைகள் ஊடாக வேகமாக பரவியது.

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு ஊரவர்கள் அறிவித்ததை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் , தீயணைப்பு பிரிவினர் மற்றும் ஊரவர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ குடியிருப்பு பகுதிக்குள் பரவ முதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையால் ,பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஊரவர்கள் தெரிவித்தனர்.