2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

வருண ஜயசுந்தரவை கைது செய்ய தீர்மானம் இல்லை – சட்டமா அதிபர்

உள்ளூர்June 12, 2026 · 2 months முன்2
வருண ஜயசுந்தரவை கைது செய்ய தீர்மானம் இல்லை – சட்டமா அதிபர்


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.