2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டெங்கு மற்றும் மலேரியாவைத் தடுக்க விழிப்புணர்வு!

உள்ளூர்June 6, 2026 · 2 months முன்0
டெங்கு மற்றும் மலேரியாவைத் தடுக்க விழிப்புணர்வு!

தொடர்ச்சியாக 48 மணித்தியாலங்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என தேசிய மலேரியா தடுப்பு நுளம்பு கட்டுப்பாட்டு பணிப்பாளர் மருத்துவர் பிரசங்க சேரசிங்க எச்சரித்துள்ளார்.

நுளம்புகளினால் பரவும் நோய்களின் அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்த்தொற்றுகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும், அவை பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது என மருத்துவர் சேரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நுளம்புகளுடன் தொடர்புடைய நோய்கள் தொடர்ந்து பொது சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக விளங்குவதாகத் தெரிவித்த அவர், தொடர்ச்சியான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை பொதுமக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், வீடுகள் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.