2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இரத்தினக்கல் விவகாரத்தில் எஹெலியகொட OIC கைது!

உள்ளூர்June 4, 2026 · 2 months முன்2
இரத்தினக்கல் விவகாரத்தில் எஹெலியகொட OIC கைது!

எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஒருவர், இரத்தினபுர பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹெலியகொட பகுதியில் உள்ள இரத்தினக்கல் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரத்தினக்கல் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுரங்க உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த பொலிஸ் அதிகாரி தனது பதவியைப் பயன்படுத்தி ஒரு சந்தேக நபரிடம் முறையற்ற செல்வாக்கு செலுத்தியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு இரத்தினக்கல்லைப் பெற்றுக்கொள்வதற்காக பலவந்தம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுர பிரதேச புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.