2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தற்போதைய சூழல் காரணமாக வாகன விலை ஏற்றம்?

உள்ளூர்May 26, 2026 · 3 months முன்2
தற்போதைய சூழல் காரணமாக வாகன விலை ஏற்றம்?

வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் கடன் மற்றும் லீசிங் வசதிகளில் செய்யப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டில் வாகன இறக்குமதி மற்றும் விற்பனை துறையில் சரிவு ஏற்படக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மாற்றங்கள் வாகனங்களின் விலையை மேலும் உயர்த்தும் அபாயத்தையும் உருவாக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், அபாயங்களை கட்டுப்படுத்தவும் மத்திய வங்கி புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் மற்றும் லீசிங் வசதிகளின் உச்ச வரம்புகள் இன்று (25) முதல் குறைக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின் கீழ், நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி 60 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிநவீன வாகனங்கள் மற்றும் ஒரு ஆண்டுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் லீசிங் வசதிகளும் இன்றிலிருந்து குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.