2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிக்காக களமிறங்கும் சென்னை அணி

விளையாட்டுMay 21, 2026 · 3 months முன்3
தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிக்காக களமிறங்கும் சென்னை அணி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பிளே – ஓஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால், எம்.எஸ். தோனி மீண்டும் அணியில் இணைவார் என்று துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹசி உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்டைவிரல் காயம் காரணமாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான கடைசி லீக் போட்டியிலும் தோனி விளையாட மாட்டார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததால், பிளே – ஓஃப் வாய்ப்பு கடினமாகியுள்ளது.

எனவே இன்று நடைபெறவுள்ள குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இதில் வெற்றி பெற்று 14 புள்ளிகளைப் பெற்றாலும், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

இது குறித்துப் பேசிய மைக் ஹசி, தோனியின் காயம் தற்போது குணமடைந்து வருகிறது.

இந்த லீக் போட்டியில் அவர் விளையாடாவிட்டாலும், நாங்கள் பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறினால் நிச்சயமாக அணியில் இணைவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த போட்டியின் ஏமாற்றத்திலிருந்து மீண்டு, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே அணியின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.