2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி விஜயம்

உள்ளூர்September 5, 2025 · 12 months முன்0
மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி விஜயம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நொச்சிமுனை கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வடிகான் அமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பார்வையிட்டதோடு, அப்பகுதி மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தினால், இப்பகுதியில் வடிகான்கள் மற்றும் அழகுப்படுத்தும் பணிகளும் நன்னீர் மீன் மீன்பிடியாளர்களுக்கு வேண்டிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.