2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மொரட்டுமுல்லவில் பரபரப்பு!

உள்ளூர்May 13, 2026 · 3 months முன்3
மொரட்டுமுல்லவில் பரபரப்பு!

மொரட்டுமுல்ல காவல்துறை எல்லைக்குட்பட்ட ஜனதா ஜய மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (13 ) தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் மேல் மாடியில் அமைந்திருந்த வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் டயர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடமே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இந்தத் தீ விபத்தினால் அங்கிருந்த வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் டயர்கள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன், வீட்டிற்குச் சிறு அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு வாகனம் மற்றும் நீர் தாங்கி ஊர்தி என்பன தீயணைப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டன.

தீயணைப்புப் பிரிவு அதிகாரிகளின் கடும் முயற்சியினால் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீ விபத்தினால் எவருக்கும் உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனவும், தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்புப் பிரிவினரும் காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.