2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

தெனியாய வலயப் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

உள்ளூர்May 12, 2026 · 3 months முன்2
தெனியாய வலயப் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

தெனியாய கல்வி வலயத்தில் நிலவிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் புதன்கிழமை (13) முதல் மீண்டும் திறக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஷான் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் நாளை (12) பாடசாலைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் ஒரு நாள் தாமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 13 ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள் வழமை போல் ஆரம்பமாகும்.