2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

யாழ்தேவி மீண்டும் பயணத்தில்! கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

உள்ளூர்May 11, 2026 · 3 months முன்2
யாழ்தேவி மீண்டும் பயணத்தில்! கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பிரபல யாழ்தேவி தொடருந்து சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய அட்டவணையின்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ்தேவி தொடருந்து இயக்கப்படும்.

அதேபோல், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு தினங்களில் சேவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யாழ்தேவி தொடருந்தில், பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட நான்கு முதல் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதியை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை, வடக்கு மக்களுக்கும் தலைநகருக்கும் இடையிலான பயணத்தை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.