2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

‘படுவத்தே சாமர’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

உள்ளூர்May 11, 2026 · 3 months முன்1
‘படுவத்தே சாமர’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

அஜர்பைஜானில் கைது செய்யப்பட்டு இந்தியாவின் புது தில்லி வழியாக நாடுகடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சந்தேக நபரான மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் “பதுவத்த சமரா” நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ராகம, பதுவத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதான இவர், நீண்டகாலமாக துபாயில் தலைமறைவாக இருந்து வந்ததாகவும், பின்னர் அஜர்பைஜானுக்கு தப்பிச் சென்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அஜர்பைஜானில் கைது செய்யப்பட்ட அவர், அங்கிருந்து இந்தியாவின் புது தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, நேற்று (10) இரவு 10.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-196 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

துசித ஹல்லோலுவ மீதான தாக்குதல் சம்பவம், கணேமுல்ல சஞ்சீவ கொலைக்காக ஆயுதங்களை வழங்கியமை, மேலும் நாட்டில் இடம்பெற்ற பல போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபராக பதுவத்த சமரா அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரை, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.