2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

2.5 மில்லியன் டொலர் விவகார அவசர விசாரணை கோரிக்கை!

உள்ளூர்May 4, 2026 · 3 months முன்2
2.5 மில்லியன் டொலர் விவகார அவசர விசாரணை கோரிக்கை!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் உறுப்பினர், முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இந்த நிதி மோசடி குறித்து, அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, உடனடியாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இலங்கை அரசாங்கத்தினால், அவுஸ்திரேலியாவின் தரப்பினருக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திருடப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.