2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

8 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை!

உள்ளூர்May 2, 2026 · 4 months முன்2
8 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 207,182 மற்றும் 218,350 சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் பதிவாகியுள்ளன. 

இது 2024 மற்றும் 2018 ஆகிய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. எவ்வாறாயினும், 2026 மார்ச் மாதத்தில் இந்த நேர்மறையான போக்கில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகை 183,979 ஆகக் குறைந்துள்ளது. 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே இந்தத் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.