2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

“ஜனநாயக மக்கள் அதிகாரம்” மட்டக்களப்பில் மே தின நிகழ்வு!

உள்ளூர்May 1, 2026 · 4 months முன்2
“ஜனநாயக மக்கள் அதிகாரம்” மட்டக்களப்பில் மே தின நிகழ்வு!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின பேரணியும், கூட்டமும் இன்று அமைச்சர் சுனில் ஹிந்து நெத்தி தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான தொழிலாளர் தின ஊர்வலமானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று மட்டு காந்தி பூங்காவைச் சென்றடையந்தது. பின்னர் மே தின கூட்டம் இடம்பெற்றது.

இந்த தொழிலாளர் தின பேரணியில் தொழிலாளர்களது உரிமைகள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தி சென்றனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, பிரதேச அமைப்பாளர்கள், தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் கலை கலாசார நிகழ்வுகளும் தொழிலாளர் தின சிறப்புரைகளும் இங்கு இடம்பெற்றன.