நாட்டை இன்று வந்தடையும் மசகு எண்ணெய் கப்பல்

நாட்டுக்குத் தேவையான மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்,
நாட்டுக்கு இன்று வருகை தரும் குறித்த கப்பலில் 95,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேலும் பல எரிபொருள் கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளன.




