2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

முதல் வாக்காளராக ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அஜித்

பல்சுவைApril 23, 2026 · 4 months முன்3
முதல் வாக்காளராக ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அஜித்

இந்தியாவின் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

திருவான்மியூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கு வருகை தந்த நடிகர் அஜித் குமார், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், முதல் நபராக அவர் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் வந்திருந்த அவர், தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டி புகைப்படங்களுக்குத் தோற்றமளித்தார்.