2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

செப்.1 முதல் ஆப்பிள் நிறுவன புதிய சி.இ.ஓ-ஆக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பு

தொழில்நுட்பம்April 21, 2026 · 4 months முன்3
செப்.1 முதல் ஆப்பிள் நிறுவன புதிய சி.இ.ஓ-ஆக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பு

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு டிம் குக் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

65 வயதான குக், செப்டம்பர் 01-ஆம் திகதியன்று தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளை ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதே சமயம், கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள அந்த நிறுவனத்தில் நிர்வாகத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பதும், இத்தகைய ஒரு அசாதாரணமான நிறுவனத்தை வழிநடத்த நம்பப்பட்டதும் என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகும்நான் என் முழு உள்ளத்தாலும் ஆப்பிளை நேசிக்கிறேன்.

இவ்வளவு புத்திசாலித்தனமான, புதுமையான, படைப்பாற்றல் மிக்க மற்றும் ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒரு குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று குக் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார் .

இந்நிலையில், செப்.1ல் இருந்து வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பார் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.