2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்2
மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த எரிவாயு கையிருப்புகள் மாலைதீவில் உள்ள மிதக்கும் சேமிப்பு முனையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தவிர, மேலதிகமாக 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று தென்னாப்பிரிக்கா ஊடாக மாலைதீவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்ப போதுமான எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பண்டிகைக் காலத்தின் பின்னரும் சந்தைக்குத் தேவையான எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏப்ரல் 16 முதல் மீண்டும் வழமை போல் எரிவாயு நிரப்பும் மற்றும் விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது