2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தியத் துணை ஜனாதிபதி முதல் முறையாக இரு நாள் இலங்கைப் பயணம்

உள்ளூர்April 17, 2026 · 4 months முன்1
இந்தியத் துணை ஜனாதிபதி முதல் முறையாக இரு நாள் இலங்கைப் பயணம்


இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2026 ஏப்ரல் 19-20 தேதிகளில் ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்வார்.என இலங்கை இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

இலங்கை இந்திய தூதரகம் இன்று (17) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவைச் சந்திப்பார். அதனை தொடர்ந்து பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர் இந்தியத் தலைவர்களையும் சந்திப்பார்.

அதேவேளை  இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குப் பார்வை மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கை ஆகியவற்றில் இலங்கை ஒரு முக்கியப் பங்காளியாக விளங்குகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து பிரதி ஜனாதிபதி அவர்களின் இலங்கை பயணம் அமைந்துள்ளதுடன்   இந்தியாவையும் இலங்கையையும் பிணைக்கும் பல்லாயிரம் ஆண்டு கால பழமையான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் டின அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.