2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுளிபுரத்தில் 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: இளைஞன் கைது

உள்ளூர்April 16, 2026 · 4 months முன்2
சுளிபுரத்தில் 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: இளைஞன் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுளிபுரம் பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஏப்ரல் 15) மாலை 5:00 மணியளவில், சுளிபுரம், வேறம் முல்லைப் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த 26வயதுடய இளைஞனால் கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு சந்தேக நபரான குறித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காகவும், மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.