2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புத்தாண்டு வாரத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு

உள்ளூர்April 14, 2026 · 4 months முன்2
புத்தாண்டு வாரத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு

புத்தாண்டு வாரத்தில் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், விபத்துகளை தடுப்பதில் தொடர்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் நாடளாவிய ரீதியில் அண்மை காலங்களில் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக சுமார் 29 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் விபத்துத் தடுப்புப் பிரிவின் சமூக நல மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 இலட்சம் பேர் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன், அவர்களில் பெரும்பான்மையானோர் புத்தாண்டு காலங்களிலேயே அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்துடன் ஒப்பிடுகையில், மற்ற மாகாணங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதாகவும் சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்