2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

புத்தாண்டுப் காலத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த வைத்தியர்கள் கோரிக்கை

உள்ளூர்April 9, 2026 · 4 months முன்1

புத்தாண்டுப் காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக இந்த கோரிக்கையை முன்வைத்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரம்பரிய முறைப்படி பாற்சோறு, கொக்கிஸ், பலகாரம், அல்வா போன்ற இனிப்புப் பண்டங்கள் இல்லாமல் ஒரு புத்தாண்டு அமையாது என்பது நமக்குத் தெரியும். 

எனினும், ஒரு வேளை உணவில் ஒரு வகை இனிப்புப் பண்டத்தை மாத்திரம் உட்கொள்ளும் வகையில் ஒரு வரையறையை வைத்துக்கொள்ளுங்கள். 

அதிகளவான இனிப்பு பண்டங்கள் உண்பதை இயலுமானவரை தவிருங்கள். பால் தேநீர் அருந்துவதற்குப் பதிலாக, சர்க்கரை சேர்க்காத தேநீரை அருந்துங்கள். 

உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றாலும், இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வந்தேன் என்று கூறி, ஒரு கொக்கிஸ் அல்லது ஒரு துண்டு அல்வா என உங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒன்றை மாத்திரம் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். 

இவ்வாறான சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை ஓரளவுக்குச் சமநிலையில் பேண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.