2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

சுகாதார அமைச்சர் அதிரடி அறிவிப்பு !

உள்ளூர்April 9, 2026 · 4 months முன்1
சுகாதார அமைச்சர் அதிரடி அறிவிப்பு !

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் தாம் பங்கேற்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிதச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

கலந்துரையாடல் நடத்த வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும், மருத்துவ சங்கம் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவது நியாயமற்றது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்த நலிந்த ஜெயதிஸ்ஸ, மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், “நீங்கள் இப்படி நடந்துகொண்டால், இன்று வழங்கப்பட்ட கலந்துரையாடலை நான் இனி நடத்த மாட்டேன்… இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது. அரசாங்கமாகிய நாங்கள் இதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.