2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

விசேட சுற்றிவளைப்பில் 958 பேர் போதைப்பொருட்களுடன் கைது

உள்ளூர்February 23, 2026 · 6 months முன்2
விசேட சுற்றிவளைப்பில் 958 பேர் போதைப்பொருட்களுடன் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகளில் நேற்றையதினம் சுமார் 958 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 07 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 968 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 05 பேர் புணர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 435 கிராம் ஹெரோயின், 874 கிராம் ஐஸ், 07 கிலோகிராம் 319 கிராம் கஞ்சா, 89,747 கஞ்சா செடிகள், 04 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 43 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,740 போதை மாத்திரைகள், 337 கிராம் மதனமோதகம் மற்றும் 02 கிலோகிராம் 55 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.