2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

“பசுமை வழித்தடத்தில்” சிக்கிய 4.8 மில்லியன் சிகரெட்டுகள்!

உள்ளூர்May 13, 2026 · 3 months முன்2
“பசுமை வழித்தடத்தில்” சிக்கிய 4.8 மில்லியன் சிகரெட்டுகள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பயணி கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், 4.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இலங்கைப் பயணி ஒருவர் இன்று (13) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான இவர், இன்று அதிகாலை 02.50 மணியளவில் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா நிறுவனத்தின் G9-587 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அறிவிப்பு தேவையில்லாத “பசுமை வழித்தடம்” ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் சிக்கியுள்ளார்.

அவரிடமிருந்து “மான்செஸ்டர்” மற்றும் “பிளாட்டினம்” வகையைச் சேர்ந்த 32,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 160 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பயணியை சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.