2026 டெங்கு நிலவரம்: கணிசமாக உயர்ந்த நோயாளர்கள் எண்ணிக்கை!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், டெங்கு நோய் காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




