2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மஹிந்தவை பார்க்கச் சென்றவருக்கு பறிபோன வேலை

உள்ளூர்September 16, 2025 · 11 months முன்0
மஹிந்தவை பார்க்கச்  சென்றவருக்கு  பறிபோன வேலை

மோட்டார் சைக்களில் சுமார் 6 மணிநேரம் பயணித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கச் சென்ற தம்பதியினர் அண்மையில் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தனர்.

அவர்கள், குருநாகல் கல்கமுவ பகுதியில் இருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்களில் பயணித்து முன்னாள் ஜனாதிபதியை சென்று பார்வையிட்டும் இருந்தனர்.

அதன்படி, மகிந்த மீதான பாசத்தால் இவ்வாறு மனைவியுடன் சென்றதாக கூறிய நபர், கல்கமுவ பிரதேச சபையைச் சேர்ந்த ஒரு பெக்கோ இயக்குநர் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து திரும்பிய பிறகு அவரின் பெக்கோ இயக்குநர் வேலை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம் தெரியவருகிறது.

அத்துடன், குறித்த வேலை மீண்டும் பெறுவதற்காக கடிதம் கோரப்பட்டபோதும் அது கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான பணிப்புரை உயர் மட்டத்தில் இருந்து வந்தாக கூறப்பட்டுள்ளது.