2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!

விமல் வீரவன்சா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி.

உள்ளூர்October 17, 2025 · 10 months முன்1

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கும் திட்டம் தொடர்பாக, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்ய முனைந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சா உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள், விசாரிக்காமல் தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் இன்று (17) தீர்ப்பளித்தது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா அதிபர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்று, இந்த மனுக்களை தொடர முடியாது என நீதிமன்றம் தீர்மானித்தது.