விமல் வீரவன்சா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி.

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கும் திட்டம் தொடர்பாக, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்ய முனைந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சா உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள், விசாரிக்காமல் தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் இன்று (17) தீர்ப்பளித்தது.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா அதிபர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்று, இந்த மனுக்களை தொடர முடியாது என நீதிமன்றம் தீர்மானித்தது.