2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

புஹாரியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்.

உள்ளூர்December 31, 2025 · 8 months முன்1

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புஹாரியின் கட்சி உறுப்புரிமை, உடனடி அமலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததே இந்த நடவடிக்கைக்கான காரணமாகும்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கியிருந்த நிலையில், அந்த உத்தரவுக்கு முரணாக புஹாரி செயல்பட்டதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை கட்சி ஒழுக்கத்தை கடுமையாக மீறும் செயலாகக் கருதுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த விடயம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை விளக்கி, ஒரு வாரத்திற்குள் சத்தியப்பிரமாணக் கடிதம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு புஹாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால், முன்னறிவிப்பின்றி மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.