2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

எரிபொருளை சேமித்தால்? மீண்டும் QR

உள்ளூர்March 1, 2026 · 6 months முன்0

பொதுமக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இலியாஸ் முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என உறுதி அளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

எரிபொருள் இருப்பு: இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

எச்சரிக்கை: தேவையற்ற அச்சம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகளவு எரிபொருளைச் சேகரித்தால், அது விநியோகச் செயற்பாடுகளைப் பாதிக்கும்.

QR முறை: “மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேகரிக்கத் தொடங்கினால், விநியோகத்தை முறையாக நிர்வகிக்க நாம் மீண்டும் QR குறியீடு முறையை நாட வேண்டியிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.