நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை அப்பதவியில் இருந்து நீக்கி, சுகாதார அமைச்சகத்துடன் இணைப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நண்பகல் 12 மணியளவில் நிறைவு செய்வதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருந்தது.